காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆயுதக்குவியல் சிக்கியது
![காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆயுதக்குவியல் சிக்கியது காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆயுதக்குவியல் சிக்கியது](https://media.dailythanthi.com/h-upload/2022/12/04/1019686-army-recovers.webp)
Image Courtesy: ANI
காஷ்மீரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜம்மு,
காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்துக்கு உட்பட்ட மார்வா பகுதியில் நேற்று ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சர்குண்டு-நவபாச்சி என்ற இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் 2 கையெறி குண்டுகள், ஒரு டெட்டனேட்டர், ஏ.கே. துப்பாக்கி தோட்டாக்கள், எந்திர துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி என ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
உடனடியாக அவற்றை கைப்பற்றிய வீரர்கள் பயங்கரவாதிகளின் அந்த மறைவிடத்தை அழித்தனர்.
Related Tags :
Next Story