கர்நாடக மாநிலத்தில் எஸ்., எஸ்.டி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்


கர்நாடக மாநிலத்தில் எஸ்., எஸ்.டி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்
x

கர்நாடகத்தில் எஸ்., எஸ்.டி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் அவசரச் சட்டத்தை வெளியிட கர்நாடக அமைச்சரவை இன்று முடிவு செய்தது. எஸ்சி/எஸ்டி ஒதுக்கீட்டை அதிகரிக்க அமைச்சரவை அக்டோபர் 8ஆம் தேதி முறையான ஒப்புதலை வழங்கியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படுவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் கர்நாடகத்தில் இடஒதுக்கீடு அதிகரிப்பதால் மொத்த இடஒதுக்கீடு 56 சதவிகிதம் உயர உள்ளது.

மேலும் இந்த இடஒதுக்கீடு உயர்வை அரசியலமைப்பின் 9 வது அட்டவணையின் கீழ் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், இதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்க கவர்னருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று வெளியிட்ட அறிவிப்பில், "எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், 33 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்துக்கு இன்று எனது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு அவர்களின் வாழ்வில் ஒளியையும் பிரகாசத்தையும் கொண்டு வருவதோடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதுமான வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்களை உயர்த்தும்" என்று தெரிவித்திருந்தார்.


Next Story