கேரளாவில் வேலையை விட மறுத்த மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் கைது


கேரளாவில் வேலையை விட மறுத்த மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் கைது
x

கேரளாவில் விருப்பத்திற்கு மாறாக வேலைக்குச் சென்ற மனைவியை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் தனது மனைவியை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த 27 வயது இளைஞரான திலீப் என்பவரை மலையன்கீழ் போலீசார் கைது செய்தனர். திலீப்பின் விருப்பத்திற்கு மாறாக அவரது மனைவி சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சென்றதால் திலீப் அவரை அடித்ததாகக் கூறப்படுகிறது.

இணையத்தில் வெளியாகி வைரலான அந்த வீடியோவில், திலீப், தனது மனைவியை மோசமாகத் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முகத்தில் ரத்தத்துடன் அவரது மனைவி கடனை அடைக்க நான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் திலீப்பின் மனைவி அளித்த புகாரின் பேரில், மலையன்கீழ் போலீசார் கொலை முயற்சி மற்றும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் திலீப்பை கைது செய்தனர்.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் பெண் ஒருவர், வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி, அவரது கணவரைத் தோளில் சுமக்க வைத்து, காலணி மாலை அணிவித்துத் தாக்கப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Next Story