கிருஷ்ணகிரி வெடி விபத்து: சி.பி.ஐ. விசாரணை கோரி அமித்ஷாவிடம் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தல்


கிருஷ்ணகிரி வெடி விபத்து: சி.பி.ஐ. விசாரணை கோரி அமித்ஷாவிடம் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தல்
x

அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு கிடங்கில் கடந்த 29-ந்தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அருகில் இருந்து 3 வீடுகள் தரைமட்டமாகின. இந்த விபத்து குறித்து போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கிருஷ்ணகிரி வெடிவிபத்து தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, கிருஷ்ணகிரி விபத்திற்கு கேஸ் சிலிண்டர் காரணமல்ல என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சென்று சந்தித்தார். அப்போது கிருஷ்ணகிரி விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் ஒன்றை அமித்ஷாவிடம் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வழங்கியுள்ளார்.


Next Story