கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
x

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மைசூரு:

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ஆனால் கனமழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் பருவமழை தீவிரம் அடைந்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் மாநிலத்தில் உள்ள அணைகள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பின. இந்த நிலையில் மைசூரு, மண்டியா, பெங்களூரு, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ண ராஜசாகர்) அணைக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 862 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 44 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

6,050 கனஅடி நீர்

இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 2,282 அடி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 331 கன அடி தண்ணீர் வந்தது.

அதேபோல் அணையில் இருந்து வினாடிக்கு 6,050 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் திருமகூடலுவில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் செல்கிறது. அதன்படி இரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 19 ஆயிரத்து 94 கன அடி தண்ணீர் தமிழகம் செல்கிறது.


Next Story