மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x

சுப்ரீம் கோர்ட்டில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சிபிஐ கைது செய்தது.

பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது தனியே அமலாக்கத்துறை கடந்த மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன. இதனிடையே, சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கும்படி மணீஷ் சிசோடியா தொடர்ந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியா தனக்கு எதிரான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் வழக்குகளில் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் 14-ந்தேதி(நாளை) விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story