சபரிமலையில் மாசி மாத பூஜைக்காக 12-ந்தேதி நடைதிறப்பு - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்


சபரிமலையில் மாசி மாத பூஜைக்காக 12-ந்தேதி நடைதிறப்பு - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
x

மாசி மாத பூஜைகளுக்காக வரும் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக வரும் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் இல்லை. மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.

தொடர்ந்து வருகிற 17-ந்தேதி வரை அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். பின்னர் 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.



Next Story