மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு மனு மீது அடுத்த வாரம் விசாரணை


மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு மனு மீது அடுத்த வாரம் விசாரணை
x

கோப்புப்படம் 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

புதுடெல்லி,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

மேலும், இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.


Next Story