ஆந்திரா: வீடு வீடாகச் சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மந்திரி ரோஜா


ஆந்திரா: வீடு வீடாகச் சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மந்திரி ரோஜா
x

நகரி தொகுதி எம்.எல்.ஏவும், மந்திரியுமான ரோஜா வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

திருப்பதி:

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய கட்சி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தொகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் பொது மக்களுக்கு சரியாக கிடைக்கிறதா என கேட்டு குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் நகரி தொகுதி எம்.எல்.ஏவும், மந்திரியுமான ரோஜா நகரில் நேற்று வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது பொதுமக்கள் மந்திரி ரோஜாவுக்கு மாலை அணிவித்தும் மேள தாளங்கள் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை அடுத்து அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் பென்ஷன் விதவை பென்ஷன் உள்ளிட்டவை கிடைக்கிறதா. ரேஷன் பொருட்கள் சரியான அளவில் வீடு தேடி வருகிறதா. வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ஆந்திர சட்டசபைக்கு தேர்தல் வர இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் ஆந்திராவில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வருவதால் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது


Next Story