மிசோரமில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு


மிசோரமில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு
x

மிசோரமில் மித அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.



சாம்பய்,



வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமின் சாம்பய் நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இன்று இரவு 8.43 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால், ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


Next Story