மாமியாரை குக்கரால் அடித்துக்கொன்ற பெண்


மாமியாரை குக்கரால் அடித்துக்கொன்ற பெண்
x

கோப்புப்படம்

டெல்லியில் மருமகள் மாமியாரை குக்கரால் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் சுர்ஜித் சோம் (வயது 51), அவரது மனைவி சர்மிஷ்தா சோம் (48) மற்றும் அவர்களது 16 வயது மகள் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுடன் சுர்ஜித் சோமின் தாயார் ஹசி சோம் (86) வசித்து வந்தார். இதனிடையே ஹசி சோம் நீண்ட நாட்களாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும், நடப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிகிறது. இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி ஹசி சோம் அவரது அறையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதைப்பார்த்த சுர்ஜித் சோம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பலியான ஹசி சோம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் சர்மிஷ்தா, தனது மாமியார் ஹசி சோமை குக்கரைக்கொண்டு அடித்துக்கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சா்மிஷ்தாவை கைது செய்தனர். வயதான மாமியாரை கவனித்துக்கொள்வதில் ஏற்பட்ட விரக்தியால் சர்மிஷ்தா இவ்வாறு செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story