திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்; ரூ 1.5 கோடி நன்கொடை


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்;  ரூ 1.5 கோடி நன்கொடை
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்திற்காக ரூ1.5 கோடியை நன்கொடையாகவும் முகேஷ் அம்பானி அளித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் இருந்த யானைக்கு முகேஷ் அம்பானி உணவு அளித்ததாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக கடந்த திங்கள்கிழமை ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலிலுக்கு குடும்பத்துடன் சென்று முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story