141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை... கேரள பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை


141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை... கேரள பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Dec 2023 3:22 PM GMT (Updated: 24 Dec 2023 1:56 AM GMT)

கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேக்கடி,

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரம் 152 அடி ஆகும். இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகிறது.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை இன்று 141 அடியை எட்டியது. இதனால், கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story