மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்வு
x

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்வடைந்து 54,237 புள்ளிகளாக உள்ளது.

மும்பை,



மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்வடைந்து 54,237 புள்ளிகளாக உள்ளது.

இதில், இன்போசிஸ், டெக் மகிந்திரா, எல் அண்டு டி, டாக்டர் ரெட்டிஸ், சன் பார்மா, இண்டஸ்இண்ட் வங்கி, எச்.யூ.எல்., டாடா ஸ்டீல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய நிறுவன பங்குகள் 1 முதல் 2 சதவீத லாபத்துடன் உயர்ந்து காணப்பட்டன.

எச்.டி.எப்.சி., பிரிட்டானியா மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 130 புள்ளிகள் உயர்ந்து 16,180 புள்ளிகளாக உள்ளது. இதன்படி, நிப்டியில் ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், யூ.பி.எல். மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகியவை லாபத்துடன் காணப்பட்டன.


Next Story