மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் சரிவு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் சரிவு
x

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகளுக்கும் கூடுதலாக சரிவடைந்து 52,690 புள்ளிகளாக உள்ளது.



மும்பை,



மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகளுக்கும் கூடுதலாக சரிவடைந்து 52,690 புள்ளிகளாக உள்ளது. நடப்பு வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கட் கிழமையில் இது 53,300 புள்ளிகளை கடந்து உயர்ந்து காணப்பட்டது.

இந்த வாரம் மற்றும் மாதம் முடிவடைய இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக பங்கு சந்தைகள் சரிவை சந்தித்து உள்ளன.

தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 15,700 புள்ளிகளாக உள்ளது. இது கடந்த திங்கட் கிழமையில் 190 புள்ளிகள் உயர்ந்து அல்லது 1.21% அதிகரித்து 15,900 புள்ளிகளை கடந்திருந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் அனைத்து 30 பங்குகளும் இன்று சரிவை சந்தித்து உள்ளன. நிப்டி குறியீட்டில் வங்கி துறை அதிக நஷ்டம் (1.3 சதவீதம்) சந்தித்து உள்ளது. இதேபோன்று ஐ.டி. துறையும் (1.1 சதவீதம்) மற்றும் உலோக துறையும் (1 சதவீதம்) சரிவை சந்தித்து உள்ளன.


Next Story