மும்பை: 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - இருவர் உயிரிழப்பு


மும்பை: 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - இருவர் உயிரிழப்பு
x

image courtesy: ANI

மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மும்பை,

மும்பை மேற்கு கன்டிவாலி பகுதியில் உள்ள எட்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று நண்பகல் 12:30 மணியளவில் திடீரென கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் தீயானது மளமளவென மேல் தளங்களுக்கு பரவியது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story