மாயமான பள்ளி மாணவி ஏரியில் பிணமாக மீட்பு


மாயமான பள்ளி மாணவி ஏரியில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 1 Oct 2023 6:45 PM GMT (Updated: 1 Oct 2023 6:46 PM GMT)

சிக்பள்ளாப்பூரில் மாயமான பள்ளி மாணவி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாேகபள்ளி

பள்ளி மாணவி மாயம்

சிக்பள்ளாப்பூர் தாலுகா இரேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி நாகம்மா. இந்த தம்பதியின் மகள் நயனா (வயது 15). இவர், சிக்பள்ளாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி நயனா ெசன்றார்.

ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர், நயனாவை பல இடங்களில் தேடினர்.

மேலும் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது நயனா பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதனால் அவர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாகேபள்ளி போலீசாருக்கும் பெற்றோர் தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசாரும் நயனாவை தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் பாகேபள்ளி அருகே கொண்டரவள்ளி ஏரியின் கரையில் மாணவி நயனாவின் செருப்பு, பள்ளி பை கிடந்தது. மேலும் அவரது உடல் ஏரியில் மிதந்தது.

இதனை அறிந்த போலீசார், விரைந்து வந்து நயனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நயனாவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

நயனா எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது அவரை கடத்தி கொலை செய்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து பாகேபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் காலை நயனா பள்ளிக்கு செல்லவில்லை என்பதும், சிக்பள்ளாப்பூரில் இருந்து அரசு பஸ்சில் பாகேபள்ளிக்கு ெசன்றதும், அங்கிருந்து ெகாண்டவரபள்ளி ஏரிக்கு சென்றதும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் சாவில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story