டி.நரசிப்புரா அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது


டி.நரசிப்புரா அருகே  6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 July 2023 6:45 PM GMT (Updated: 17 July 2023 6:45 PM GMT)

டி.நரசிப்புரா அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுதத வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மைசூரு-

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா பன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது30). இவர் அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அப்பகுதியில் 6 வயது சிறுமி விளையாடி கொண்டு இருந்தாள்.

அப்போது அந்த வழியாக வந்த சுரேஷ் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாார். இதையடுத்து சிறுமி அங்கிருந்து அழுது கொண்டு வீட்டிற்கு சென்றாள். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் கேட்டனர். அவள் சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறினாள்.

இதுகேட்ட அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பன்னூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர். இந்தநிலையில் பன்னூர் பகுதியில் பதுங்கி இருந்த சுரேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story