அடுக்குமாடி குடியிருப்பில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்


அடுக்குமாடி குடியிருப்பில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்
x

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

பெங்களூரு புட்டேனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தனது கழிவறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது குளியறை ஜன்னல் வழியாக மர்மநபர் செல்போனில், பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். திடீரென அதைக்கண்டதும் இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். மேலும், வேகமாக வெளியே ஓடிவந்து பார்த்தார்.

அப்போது அதே குடியிருப்பில் வசித்து வரும் சேத்தன் பிரகாஷ் என்பவர் தான் அவரை வீடியோ எடுத்தது தெரிந்தது. இதையடுத்து அவர் உடனடியாக புட்டேனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சேத்தன் பிரகாசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story