'எதிர்கட்சியினர் மோடி வெறுப்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்' - தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்


எதிர்கட்சியினர் மோடி வெறுப்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் - தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்
x

திறப்பு விழாவை புறக்கணிப்பதற்கு எதிர்கட்சியினர் கூறும் காரணங்கள் அபத்தமானவை தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார்.

மும்பை,

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதற்கு எதிர்கட்சியினர் கூறும் காரணங்கள் அபத்தமானவை என மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது;-

"இதுபோன்ற நிகழ்வுகளை காமாலைக் கண்களுடன் பார்ப்பது நியாயமில்லை. புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாட்டின் பெருமை. நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதற்கு எதிர்கட்சியினர் கூறும் காரணங்கள் அபத்தமானவை. மோடி மீதான வெறுப்பு காய்ச்சலால் எதிர்க்கட்சியினர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறுகிய காலத்தில் கட்டமைக்கப்பட்டிருப்பது நாட்டின் பலத்தை வெளிப்படுத்துகிறது" என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.


Next Story