புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவு அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவு அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது சோலியை தோற்கடித்து முகமது முய்சு, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதிய அதிபர் முகமது முய்சுக்கு வாழ்த்துகள். நீண்டகால இந்தியா-மாலத்தீவு இருதரப்பு உறவை வலுப்படுத்தவும், இந்திய பெருங்கடல் பகுதியில் ஒட்டு மொத்த ஒத்துழைப்பை உயர்த்தவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





