மழைக்கால கூட்டத்தொடரின்போது பாஜக கூட்டணி எம்.பி.க்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி


மழைக்கால கூட்டத்தொடரின்போது பாஜக கூட்டணி எம்.பி.க்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
x

மழைக்கால கூட்டத்தொடரின்போது பாஜக கூட்டணி எம்.பி.க்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதும் பாஜக எம்.பி.க்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணியை பலப்படுத்தும் நோக்கத்தில், 38 கட்சிகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் கடந்த 18-ந்தேதி நடத்தப்பட்டது. அதில், பிரதமர் மோடி பேசினார்.

அடுத்தகட்டமாக, மழைக்கால கூட்டத்தொடரின்போது, கூட்டணி எம்.பி.க்களுடன் மோடி கலந்துரையாடுவார் என்று தெரிகிறது. இதற்காக கூட்டணி எம்.பி.க்கள், 10 குழுக்களாக பிரிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய மந்திரிகளும், பாஜக நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு குழுவும் தனித்தனியாக மோடியை சந்தித்து பேசுகிறது. அப்போது, எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் செய்யப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.


Next Story