பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது


பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது
x

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 7வது ஆட்சிக்குழு கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப்பின் முதல் முறையாக நேரடியாக நடைபெறும் இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள், ல்வேறு மந்திரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பயிர் பல்வகைப்படுத்தல், பருப்பு மற்றும் எண்ணெய் வித்து உற்பத்தியில் தற்சார்பு, புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடத்தும் நாடாகவும், தலைவராகவும் இந்தியா இருக்கும் நிலையில், இந்த திட்டங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பின்னணியில் நாட்டு விடுதலை நூற்றாண்டுக்கு முந்தைய 25 ஆண்டுகளில் நுழையும் இந்த காலகட்டத்தில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story