புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை முதல் 21-ம் தேதி வரை தினமும் நிர்மால்ய தரிசனம், அஷ்டாபிஷேகம், 25 கலசாபிஷேகம், களபாபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இந்த 5 நாட்களிலும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





