ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு


ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
x

கோப்புப்படம்

ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் தங்களை விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளனர். இது தொடர்பான மனுக்கள் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி முறையிட்டார்.

அப்போது நீதிபதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்தார். ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் ராகேஷ் துவிவேதி, வேறொரு நாளில் பட்டியிலிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு், இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தது


Next Story