ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுட்டுக்கொலை; வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெறிச்செயல் - அதிர்ச்சி வீடியோ


ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுட்டுக்கொலை; வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெறிச்செயல் - அதிர்ச்சி வீடியோ
x
தினத்தந்தி 5 Dec 2023 1:55 PM GMT (Updated: 6 Dec 2023 3:17 AM GMT)

ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் தனது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொஹமெதி. இவர் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து பிரிந்து 2015ம் ஆண்டு ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு 2018ம் ஆண்டு வெளியான பத்மாவதி திரைப்படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தியது.

இந்நிலையில், ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் இன்று ஜெய்ப்பூரின் ஷாய்ம் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது, அவரை சந்திக்க 3 பேர் வந்தனர்.

அந்த 3 பேரையும் வீட்டிற்குள் அழைத்த சுக்தேவ் சிங் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்களும் அங்கு இருந்தனர். அப்போது, சுக்தேவ் சிங்கை சந்திக்க வந்தவர்களில் இருவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுக்தேவ் சிங் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் சுக்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் சுக்தேவ் சிங்கின் பாதுகாவலருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்கள் பதிலடி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்தார். ஆனாலும், தாக்குதல் நடத்தியவர்களில் எஞ்சிய 2 பேர் தப்பியோடினர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, சுக்தேவ் சிங்கை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.




Next Story