ஓட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து; சிவசேனா எம்.எல்.ஏ. ஐகோர்ட்டில் மனு


ஓட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து; சிவசேனா எம்.எல்.ஏ. ஐகோர்ட்டில் மனு
x

ஓட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சிவசேனா எம்.எல்.ஏ. மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

மும்பை

மராட்டியத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் 6-வது எம்.பி. பதவியை கைப்பற்ற நடந்த போட்டியில் சிவசேனா வேட்பாளர் சஞ்சய் பவார், பா.ஜனதாவின் தனஞ்செய் மகாதிக்கிடம் தோல்வி அடைந்தார்.

இதேபோல தேர்தலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா ஒரு இடங்களிலும், பா.ஜனதா 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. முன்னதாக தேர்தலில் சிவசேனா எம்.எல்.ஏ. சுகாஸ் கண்டேவின் வாக்கை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளாா். அதில், இந்திய தோ்தல் ஆணையம் என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் எனது ஓட்டை செல்லாது என அறிவித்து உள்ளது. தேர்தல் ஆணையம் எனது ஓட்டை செல்லாது என அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும். " என கூறியுள்ளார்.


Next Story