அடித்து நொறுக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ. அலுவலகம் - மராட்டியத்தில் பதற்றம்


அடித்து நொறுக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ. அலுவலகம் - மராட்டியத்தில் பதற்றம்
x
தினத்தந்தி 25 Jun 2022 8:11 AM GMT (Updated: 25 Jun 2022 8:27 AM GMT)

அதிருப்தி எம்.எல்.ஏ.வின் அலுவலகம் சிவசேனா தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதில், 40 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்களை கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையி்ல் பாடண்டா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. தனஜி சாவந்தின் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் இன்று அடித்து நொறுக்கினர். சாவந்த் அசாம் தலைநகர் கவுகாத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் உள்ளார்.

பாலாஜி நகரில் உள்ள சாவத்தின் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் இன்று அடித்து நொறுக்கினர். அதேபோன்று பல பகுதிகளும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கோஷங்களும் போராட்டங்களும் சிவசேனா தொண்டர்களால் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... உத்தவ் ராஜினாமா செய்யமாட்டார்; சிவசேனாவினர் களமிறக்கப்படுவர் - அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை எச்சரித்த ராவத்




Next Story