குழந்தையை கொஞ்சுவதுபோல் பையில் மறைத்து தூக்கிச் சென்ற பெண்கள் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்


குழந்தையை கொஞ்சுவதுபோல் பையில் மறைத்து தூக்கிச் சென்ற பெண்கள் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்
x

கர்நாடகாவில், அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில், 24 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

கோலார்,

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் நகரை சேர்ந்த பூவரசனின் மனைவி நந்தினிக்கு மாவட்ட அரசு குழந்தைகள் மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில், குழந்தை பிறந்ததால் மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வார்டில் இருந்தபோது, அங்கு வந்த மூன்று பெண்கள், குழந்தையை கொஞ்சி விளையாடுவதுபோல் தூக்கிச் சென்று நீண்டநேரமாகியும் வரவில்லை.

இதுகுறித்து காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், மூன்று பெண்களும், குழந்தையை பையில் மறைத்து வெளியே செல்வது தெரியவந்தது. கோலார் - தமிழக எல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்ததில், குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சுவாதி என்ற பெண்ணை கைது செய்து, அவரிடம் இருந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Next Story