பங்கு வர்த்தகம் 2வது நாளாக கடும் வீழ்ச்சி; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி


பங்கு வர்த்தகம் 2வது நாளாக கடும் வீழ்ச்சி; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
x

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 180 புள்ளிகள் சரிவடைந்து 52,666.23 புள்ளிகளாக உள்ளது.



மும்பை,



மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ் குறியீடு 330 புள்ளிகள் சரிவடைந்து 52,500 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 50.70 புள்ளிகள் சரிவடைந்து 15,723.70 புள்ளிகளாக உள்ளது.

வார தொடக்கத்தின் முதல் நாளிலேயே பங்கு வர்த்தகம் நேற்று சரிவுடன் தொடங்கியது. இதன்படி, சென்செக்ஸ் குறியீடு 1,495.92 புள்ளிகள் அல்லது 2.75 சதவீதம் சரிவடைந்து காணப்பட்டது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் 413 புள்ளிகள் சரிவடைந்து 15,800 புள்ளிகளாக காணப்பட்டது.

இதனால், தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், பொது துறை வங்கிகள், தானியங்கி துறை, எண்ணெய் மற்றும் வாயு உள்ளிட்ட அனைத்து பங்கு வர்த்தகங்களும் 2 முதல் 3 சதவீதம் வரை சரிவடைந்து நஷ்டத்துடன் காணப்பட்டன.

இந்நிலையில், இன்று 2வது நாளாக பங்கு வர்த்தகம் மீண்டும் சரிவுடன் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

எனினும், சென்செக்ஸ் குறியீட்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் உச்சபட்ச லாபத்துடன் (1.2%) இருக்கிறது. இதனை பின்தொடர்ந்து, பவர் கிரிட், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் என்.டி.பி.சி. ஆகியவை உள்ளன.

ஏசியன் பெயிண்ட்ஸ் மிக மோச சரிவை (2.4%) சந்தித்து உள்ளது. அதனுடன் டெக் மகிந்திரா மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவையும் இணைந்துள்ளன.


Next Story