தெலுங்கானா: ஆட்டோ மீது லாரி மோதி விபத்து; 3 பேர் பலி


தெலுங்கானா:  ஆட்டோ மீது லாரி மோதி விபத்து; 3 பேர் பலி
x

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்திலுள்ள யெல்லெண்டா கிராமத்தில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது. மாநிலத்தின் கம்மம் பகுதியிலிருந்து வாரங்கல் நோக்கி அதிக வேகத்தில் லாரி வந்தது. அது யெல்லெண்டா கிராமம் அருகே வந்தபோது சாலையில் எதிர் திசையில் வந்த மூன்று சக்கர ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆட்டோவில் பயணித்த 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனை கண்ட பொது மக்கள் விரைந்து சென்று காயங்களுடன் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story