இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம்:பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் நன்றி


இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம்:பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் நன்றி
x

‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தான் எடுத்துக்கொண்ட படத்தையும் டெட்ரஸ் அதனோம் வெளியிட்டுள்ளார்.

பாலி,

இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதனோம், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகநாத் ஆகியோர் கூட்டாக அடிக்கல் நாட்டினர்.

இந்த மையத்தை அமைக்க இந்தியா 250 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,000 கோடி) நிதி வழங்குகிறது. இந்த மையத்தை அமைப்பதில் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது. இதற்காக 'ஜி-20' உச்சி மாநாட்டில் பங்கேற்க பாலி வந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையொட்டி டுவிட்டரில் அவர் ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பிரதமர் மோடி அவர்களே, உலக பாரம்பரிய மருத்துவ மையத்தை கட்டியெழுப்புவதில் உலக சுகாதார நிறுவனத்துடனான உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. நாம் ஒன்றுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம்" என குறிப்பிட்டுள்ளார்.


Next Story