ரூ.4 லட்சம் வைப்புத் தொகையை எடுக்க ஒத்துழைக்காததால் சிறுமிக்கு அயன் பாக்சால் சூடு வைத்த பெரியம்மா


ரூ.4 லட்சம் வைப்புத் தொகையை எடுக்க ஒத்துழைக்காததால் சிறுமிக்கு அயன் பாக்சால் சூடு வைத்த பெரியம்மா
x

கோப்புப்படம் 

சொந்த தங்கையின் மகள் என்றும் பாராமல் பெரியம்மா பணத்திற்காக சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துமகூரு,

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில், பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியின் பெயரில், 4 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை வங்கியில் உள்ளது. சிறுமி பாட்டி வீட்டில் வளர்ந்து வரும் நிலையில், இதனை அறிந்த அவரது பெரியம்மா நஞ்சம்மா என்பவர், சிறுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வங்கியில் உள்ள 4 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையை எடுக்க கையெழுத்திடும்படி, சிறுமியை அவரது பெரியம்மா மிரட்டியுள்ளார். அதற்கு சிறுமி மறுக்கவே, ஆத்திரமடைந்த அவர் அயன் பாக்சால் சிறுமியின் தொடையில் சூடு வைத்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் பாட்டி போலீசில் புகாரளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் பெரியம்மா நஞ்சம்மா மற்றும் அவரது மகன் பசவராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொந்த தங்கையின் மகள் என்றும் பாராமல் பணத்திற்காக சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story