வீட்டில் குழந்தை பெற்று வாளியில் விட்டு விட்டு, மருத்துவமனை சென்ற தாய்
கேரளாவில் வீட்டில் குழந்தை பெற்ற தாய் அதனை வாளியில் விட்டு விட்டு, மருத்துவமனைக்கு சென்று உள்ளார்.
ஆலப்புழா,
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் செங்கன்னூர் பகுதியில் கர்ப்பிணி ஒருவர் வீட்டில் இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதில், அவர் வீட்டில் இருந்தபடியே குழந்தையை பிரசவித்து உள்ளார்.
அந்த குழந்தையை வீட்டின் கழிவறையில் உள்ள வாளி ஒன்றில் வைத்து விட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்று உள்ளார். இதன்பின் மருத்துவமனையில் இருந்த அதிகாரிகளிடம் அவர் நடந்த தகவலை தெரிவித்து உள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனையில் இருந்தவர்கள் உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனே அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று புதிதாக பிறந்த அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
வீட்டில் குழந்தை பெற்று, அதனை கழிவறை வாளியில் விட்டு விட்டு, சிகிச்சைக்காக அதன் தாய் மருத்துவமனைக்கு சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.