இந்தியா- வங்காளதேசம் இடையே மீண்டும் தொடங்கும் ரயில்சேவை


இந்தியா- வங்காளதேசம் இடையே மீண்டும் தொடங்கும் ரயில்சேவை
x

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரு நாடுகளுக்கு இடையேயான ரயில் சேவைகள் மார்ச் 2020 இல் நிறுத்தப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பயணிகள் ரயில் சேவை மே 29 முதல் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் மார்ச் 2020 இல் நிறுத்தப்பட்டன.

டாக்காவிலிருந்து கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் வங்காளதேச ரயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் கொல்கத்தாவிலிருந்து இந்திய ரயில்வே ரேக் மூலம் மே 29, 2022 அன்று மீண்டும் தொடங்க ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளிட்டு உள்ளது.



Next Story