குஜராத் சோமநாதர் ஆலயத்தில் மூவர்ண மின்னொளி அலங்காரம்


குஜராத் சோமநாதர் ஆலயத்தில் மூவர்ண மின்னொளி அலங்காரம்
x

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சோமநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சோமநாதர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இன்று இந்திய தேசிய கொடியின் மூவர்ண மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.

அந்த வகையில் குஜராத் சோமநாதர் ஆலயத்தில் தேசிய கொடியின் மூவர்ண மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சோமநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story