காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு..?


காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு..?
x

கோப்புப்படம்

காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு அளிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளர்.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ந்தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 137 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால், தேர்தலில் பா.ஜ.க. தேல்வி அடைந்தது.

கர்நாடகாவில், 36 ஆண்டுகளுக்கு பின்னர் 137 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தனி பெரும் கட்சியாக கர்நாடகாவில் உருவெடுத்து இருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள இடங்களில் அவர்களை மாநில கட்சிகள் ஆதரிப்பதில் தவறில்லை, அதே போல் மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்க வேண்டும்.

கர்நாடகாவில் திரிணாமுல் காங்கிரஸ் உங்களை ஆதரிப்பது போலவும், வங்காளத்தில் எனக்கு எதிராகப் போவது போலவும் கொள்கை செல்ல முடியாது. நீங்கள் ஏதாவது நல்லதை அடைய விரும்பினால், சில பகுதிகளில் தியாகம் செய்ய வேண்டும்.

திரிணாமுல் காங்கிரசின் கணக்கீட்டின்படி காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது. எந்தப் பிராந்தியத்திலும் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, மேற்கு வங்கத்தில் டிஎம்சி, பீகாரில் ஜேடியு-ஆர்ஜேடி கூட்டணி மற்றும் பிறராலும் ஆதரிக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story