அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய மந்திரி அமித்ஷா உத்தரவு


அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய மந்திரி அமித்ஷா உத்தரவு
x

அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார். இதில் ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனையின் முடிவில் அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஜம்மு-காஷ்மீர் போலீசார், சி.ஆர்.பி.எப். துணை ராணுவப் படையினர், ராணுவத்தினர் என 3 அடுக்கு பாதுகாப்பு அமர்நாத் யாத்திரைக்கு வழங்கப்படும். மேலும் உயர்தொழில்நுட்ப கண்காணிப்பும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story