2-வது பெண்குழந்தை பிறந்ததால் விரக்தி: பிறந்து 3 நாளேயான குழந்தையை கொன்ற தாய்


2-வது பெண்குழந்தை பிறந்ததால் விரக்தி: பிறந்து 3 நாளேயான குழந்தையை கொன்ற தாய்
x

கோப்புப்படம்

மராட்டியத்தில் 2-வது பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்த பெண் பிறந்து 3 நாட்களேயான குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லத்தூர்,

மராட்டியத்தில் 2-வது பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்த பெண் பிறந்து 3 நாட்களேயான குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

உஸ்மானாபாத்தில் ஹோலியில் வசிக்கும் 25 வயதான பெண்ணுக்கு, காசர் ஜவாலா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 2-வது பெண்குழந்தை பிறந்ததால் மனமுடைந்த அந்த பெண், கடந்த டிசம்பர் 29 அன்று குழந்தையை கைக்குட்டையால் கழுத்தை நெரித்துக் கொன்றார்.

விசாரணையில் தாயே குழந்தையைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story