வைகுண்ட ஏகாதசி.. திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு: சிறப்பு டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு


வைகுண்ட ஏகாதசி.. திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு: சிறப்பு டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு
x
தினத்தந்தி 10 Nov 2023 4:25 AM GMT (Updated: 10 Nov 2023 5:38 AM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

திருப்பதி,

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இன்று (10-ந்தேதி) ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளொன்றுக்கு 22,500 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச தரிசனம் மூலம் நாளொன்றுக்கு 42,500 பேர் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களில் 4 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Next Story