தெலுங்கானாவில் இன்று வாக்குப்பதிவு: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்


தெலுங்கானாவில் இன்று வாக்குப்பதிவு: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
x

சமீபத்தில் மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆளும் தெலங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பிஆா்எஸ், முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் இத்தோ்தலில் முதல்வா் சந்திரசேகா் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

அண்மையில் மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தெலுங்கானாவிலும் வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் டிசம்பா் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.


Next Story