ஓடும் ரெயிலின் படிக்கட்டிலிருந்து விழுந்த நபர்...! தக்க நேரத்தில் காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்


ஓடும் ரெயிலின் படிக்கட்டிலிருந்து விழுந்த நபர்...! தக்க நேரத்தில் காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்
x
தினத்தந்தி 31 May 2022 9:29 AM GMT (Updated: 31 May 2022 9:33 AM GMT)

உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரெயிலின் படிக்கட்டில் இருந்து விழுந்த நபரை ரெயில்வே போலீசார் துரிதமுடன் செயல்பட்டு காப்பாற்றினார்.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஒன்று புறப்பட்டுக்கொண்டு இருந்தது. அப்போது அந்த ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென நிலை தடுமாடி பிளாட்பாரத்தில் விழுந்தார்.

அவர் ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டபோது, அங்கு நின்றுகொண்டிருந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீசான நேத்ரபால் சிங், துரிதமுடன் செயல்பட்டு அவரை காப்பாற்றினார். பயணியை துரிதமுடன் செயல்பட்டு காப்பாற்றிய ரெயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை பகிர்ந்துள்ள உத்தரப்பிரதேச காவல் துறை, ரெயிலின் படிக்கட்டில் பயணம் செய்வதும், ஓடும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ முயற்சிப்பது ஆபத்தானது என்ற எச்சரிக்கை தகவலையும் கூறியுள்ளது.


Next Story