எங்களது போராட்டம் தொடரும் - உமர் அப்துல்லா,மெகபூபா முப்தி டுவீட்


எங்களது போராட்டம் தொடரும் - உமர் அப்துல்லா,மெகபூபா முப்தி டுவீட்
x
தினத்தந்தி 11 Dec 2023 8:47 AM GMT (Updated: 11 Dec 2023 9:42 AM GMT)

சட்டப்பிரிவு 370-ஐ ஜனாதிபதி நீக்கியது செல்லும் என்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜம்மு,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடத்தப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், சட்டப்பிரிவு 370-ஐ ஜனாதிபதி நீக்கியது செல்லும் என்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறியதாவது:- ஏமாற்றம்தான் ஆனால் மனம் தளரவில்லை. எங்களது போராட்டம் தொடரும். இங்கு வருவதற்கு பாஜகவுக்கு பல தசாப்தங்கள் ஆனது என்றார்.

இந்த தீர்ப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மெகபூபா முப்தி கூறியதாவது:- ஜம்மு - காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கவோ, முயற்சியை கைவிடப் போவதோ இல்லை. கவுரவம் மற்றும் கண்ணியத்துக்கான போராட்டம் தொடரும். இது எங்கள் பாதைக்கான முடிவல்ல என்று தெரிவித்துள்ளார்.


Next Story