'காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம்' - ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவிப்பு


காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம் - ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவிப்பு
x

காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம் என ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்துள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி என்ற தனிக்கட்சியை நடத்தி வருகிறார். தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க விருப்பம் தெரிவித்து, சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை ஷர்மிளா ஏற்கனவே சந்தித்தார்.

இந்நிலையில், நேற்று கட்சி கூட்டம் ஒன்றில் ஷர்மிளா பேசியதாவது:-

"தெலுங்கானாவில் ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிளவுபடக்கூடாது என்பதற்காக, காங்கிரசுடன் இணையவோ அல்லது இணைந்து செயல்படவோ விருப்பம் தெரிவித்தேன். 4 மாதங்களாக நான் காத்திருந்தும், காங்கிரசிடம் இருந்து பதில் வரவில்லை. ஆகவே, காங்கிரஸ் கட்சியுடன் நமது கட்சி இணைப்பு இல்லை. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். நான் பலர் தொகுதியில் போட்டியிடுவேன்."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story