இந்தியா-வங்காளதேசம் இடையிலான 'மிதாலி எக்ஸ்பிரஸ்' ரெயில் சேவை தொடங்கியது..!


இந்தியா-வங்காளதேசம் இடையிலான மிதாலி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது..!
x

இந்தியா-வங்காளதேசம் இடையிலான 'மிதாலி எக்ஸ்பிரஸ்' ரெயில் சேவை தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.

சிலிகுரி,

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுரி நிலையத்தில் இருந்து வங்காளதேசத்தில் உள்ள டாக்காவிற்கு செல்லும் "மிதாலி எக்ஸ்பிரஸ்" இன்று தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.

புதுடெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் வங்காளதேசம் ரெயில்வே மந்திரி முகமது நூருல் இஸ்லாம் சுஜோன் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இது இந்தியா-வங்காளதேசம் இடையிலான மூன்றாவது ரெயில் சேவையாகும்.

நியூ ஜல்பைகுரி-டாக்கா கண்டோன்மென்ட் ரெயில், எண் 13132, வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது, ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் இந்திய நேரப்படி காலை 11.45 மணிக்கு இயக்கப்பட்டு மறுநாள் திங்கள் மற்றும் வியாழன்களில் வங்காளதேச நேரப்படி இரவு 9.15 மணிக்கு டாக்காவை சென்றடையும்.

திரும்பும் பயணத்திற்கு, ரெயில் எண் 13131, டாக்கா கண்டோன்மென்ட்-புதிய ஜல்பைகுரி, மிதாலி எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் அன்றும் இயக்கப்படும்.

இந்த ரெயில் நியூ ஜல்பைகுரி மற்றும் டாக்கா (டாக்கா கண்டோன்மென்ட் நிலையம்) இடையே 513 கிலோமீட்டர் தூரத்தை ஒன்பது மணி நேரத்தில் கடக்கும். தற்போதைய நிலவரப்படி, இது நான்கு குளிரூட்டப்பட்ட கேபின் கோச்சுகள் மற்றும் நான்கு குளிரூட்டப்பட்ட நாற்காலி இருக்கையுடன், டீசல் இன்ஜின் மூலம் இந்த ரெயில்சேவை நடைபெற உள்ளது.


Next Story