எங்களை முதுகில் குத்தி சேனா எம்எல்ஏக்கள் சாதித்தது என்ன? முன்னாள் மந்திரி ஆதித்யா தாக்கரே கேள்வி


எங்களை முதுகில் குத்தி சேனா எம்எல்ஏக்கள் சாதித்தது என்ன? முன்னாள் மந்திரி ஆதித்யா தாக்கரே கேள்வி
x

கோப்புப்படம் 

அவர்கள் ஏன் எங்களை முதுகில் குத்தினார்கள்? துரோகிகளாக இருந்து என்ன சாதித்தார்கள்?” என்று ஆதித்யா தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை,

இந்த ஆண்டு ஜூன் மாதம், சிவசேனா எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டே மற்றும் 39 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டனர். இது உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) அரசாங்கம் சரிவதற்கு வழிவகுத்தது, இது சேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதையடுத்து ஜூன் 30 அன்று ஷிண்டே முதல் மந்திரியாக பதவியேற்றார், மேலும் துணை முதல் மந்திரியாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். இந்த நிலையில், சேனா எம்.எல்.ஏ.க்கள் தங்களை முதுகில் குத்திவிட்டதாக முன்னாள் மந்திரி ஆதித்த்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

சிவசேனா எம்.எல்.ஏ.வும், மராட்டிய முன்னாள் மந்திரியுமான ஆதித்யா தாக்கரே, ஜல்கானில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ஷிண்டே தலைமையிலான அரசு பற்றியும், அவருக்கு ஆதரவாக நின்ற எம்.எல்.ஏக்கள் குறித்தும் அவர் கூறியதாவது:-

"நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தோம், அவர்களைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்தோம் மற்றும் எல்லா வழிகளிலும் அவர்களை ஆதரித்தோம். அவர்கள் ஏன் எங்களை முதுகில் குத்தினார்கள்? துரோகிகளாக இருந்து என்ன சாதித்தார்கள்?"

"அவர்களுக்கு என்ன கிடைத்ததோ, அதை அவர்கள் தங்களுக்காகவே பெற்றுள்ளனர். மக்களுக்கு எதையும் திருப்பித் தரவில்லை" இவ்வாறு அந்த கூட்டத்தில் அவர் பேசினார்.


Next Story