அக்னி வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி


அக்னி வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
x

அக்னி வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

முப்படைகளில் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பணி என்ற அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கும் நடைமுறைகளை ராணுவம், கடற்படை தொடங்கிவிட்டது. இதற்கான அறிவிப்புகளை முப்படைகளும் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே, அக்னிபத் திட்டத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திட்டத்தை கைவிடக்கோரி காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்னிபத் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"ஒவ்வொரு ஆண்டும் 60,000 இராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள், அதில் வெறும் 3000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் ஆயிரக்கணக்கான அக்னிவீரர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பிரதமரின் இந்த புதிய ஆராய்ச்சியால் நாட்டுக்கும் பாதுகாப்புக் குறைவு, இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் முடிகிறது" என பதிவிட்டுள்ளார்.


Next Story