தாமதமாக வந்ததால் மன்னிப்பு கேட்ட பிரதமர்: பிரதமரின் செயல் வெறும் நடிப்பு - அசோக் கெலாட் கிண்டல்
பொதுக்கூட்ட மேடையில் மண்டியிட்டு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, 'ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு ஒரு பணிவான மனிதர், எளிமையான மனிதர் என்ற பிம்பம் இருப்பது அவருக்கு (மோடி) தெரியும். இதுதான் சிறுவயது முதலே எனது பிம்பம். இதற்கு முன் அவரால் எப்படி போட்டியிட முடியும்? எனவே என்னை விட பணிவானவன் என்பதை காட்டுவதற்காகவே இவ்வாறு செய்துள்ளார்' என தெரிவித்தார்.
இத்தகைய நடிப்பை அரங்கேற்றுவதற்கு பதிலாக நாட்டு மக்களுக்கு அன்பு மற்றும் சகோதரத்துவத்துக்கான செய்தியை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story