டெல்லி நோக்கி பேரணி செல்வது குறித்து வரும் 29ம் தேதி முடிவு - விவசாய சங்கங்கள் அறிவிப்பு


டெல்லி நோக்கி பேரணி செல்வது குறித்து வரும் 29ம் தேதி முடிவு - விவசாய சங்கங்கள் அறிவிப்பு
x

டெல்லி நோக்கி பேரணி செல்வது குறித்து வரும் 29ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

டெல்லி,

விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை கடந்த 13-ந் தேதி தொடங்கினர். பஞ்சாப்-அரியானா இடையிலான ஷாம்பு எல்லையிலும், கானாரி எல்லையிலும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மத்திய அரசுடன் நடத்திய 4-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, மத்திய மந்திரிகள் முன்வைத்த யோசனையை தொடர்ந்து, கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளில் போராட்டத்தை விவசாயிகள் நிறுத்தி வைத்தனர்.

இதற்கிடையே, கடந்த 21-ந் தேதி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். பஞ்சாப்-அரியானா இடையிலான கானாரி எல்லையில் தடுப்புகளை நோக்கி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. அதில், சுப்கரன் சிங் என்ற 21 வயதான விவசாயி பலியானார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி நோக்கி பேரணி செல்வது குறித்து வரும் 29ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று விவசாய சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் வரை போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக விவசய சங்கங்கள் அறிவித்துள்ளன.


Next Story