ரூ.12 கோடி மதிப்பிலான 1,000 கிலோ போதைப்பொருள் அழிப்பு


ரூ.12 கோடி மதிப்பிலான 1,000 கிலோ போதைப்பொருள் அழிப்பு
x
தினத்தந்தி 18 April 2023 6:45 PM GMT (Updated: 18 April 2023 6:45 PM GMT)

ரூ.12 கோடி மதிப்பிலான 1,000 கிலோ போதைப்பொருளை மும்பை போலீசார் அழித்தனர்.

மும்பை,

ரூ.12 கோடி மதிப்பிலான 1,000 கிலோ போதைப்பொருளை மும்பை போலீசார் அழித்தனர்.

1,000 கிலோ போதைப்பொருள்

நிதிதலைநகரான மும்பையில் போதைப்பொருளை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மும்பைக்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. போதைப்பொருள் கும்பலை கண்காணித்து போலீசார் அவர்களிடம் உள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதில் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 201 வழக்குகளில் 1,000 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்து உள்ளனர்.

குப்பை கிடங்கில் அழிப்பு

அந்த போதை பொருட்களை போலீசார் நேற்று முன்தினம் அழித்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சுமார் 201 வழக்குகள் தொடர்புடைய 1,000 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. கொகைன், ஹெராயின், எம்.டி., கஞ்சா போன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ராய்காட் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டது" என்றாா்.

..............


Next Story